வியாழன் கவிதை

இ உருத்திரேஸ்வரன். கவிதை 196 ‘தந்தை’

இ உருத்திரேஸ்வரன்.
கவிதை 196
‘தந்தை’

தாய்க்கு பின் தாரம் என்பார்
தந்தையின் இடம் தந்தைக்கே
கண்ணில் கோபம் இதயத்தில் ஈரம்
உள்ள உறவு தந்தையே

தான் காண முடியாததை
தன் பிள்ளை காண வேண்டும்
என்பதற்காக தோளில் சுமந்து
உயர்த்தி காட்டும் உறவு

பிள்ளையின் கனவுகளை
தன் கனவுகளுடன் சேர்த்து
சுமந்து செல்லும் உறவு
விட்டுக்கொடுக்காத தந்தை

நன்றி
– இ உருத்திரேஸ்வரன்.