சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

08.03.2022
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…
“திமிர்”

திமிர் உன்னுள் சிக்குண்டால்
திமிருதல் கடினமே
உமிழும் சொற்களும்
உதவாது சிதறுமே /

ஆணவம் நம்மை
ஆட்க்கொள்ளும் தருணம்
வேதனை வார்த்தை
வில்லம்பாய் பாயுமே /

சோதனைக் காலமாய்
சொல்லதனை ஏற்றுமே
சாதனை படைக்குமே
சாதூரிய பொறுமையே /

நடையும் உடையும்
நடத்தையின் முறைமையும்
ஆணவக் குணத்தினை
அடிக்கோடிட்டு காட்டுமே /

கர்வம் வைத்தே
காத்திருக்கும் இருதயமே
சர்வ அதிகாரமும்
சாமத்தியம் என்றெண்ணாதே /

அகங்களும் அழகல்ல
அன்பியம் அழகாகும்
சுகமான இதயங்களே
சுதாரிப்பீர் சூழ்நிலையை /

நன்றி பாவைஅண்ணா🙏