வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மாற்றத்தின் திறவுகோல்…
ஆண்டாய் ஒன்று அவதாரம்
அவனிக்கே புது வரவாகும்
கணிப்பும் கணக்கும் உறவாடும்
கடிகார முட்களின் அதிகாரம்

மாற்றத்தின் வலுவே தேட்டமாகும்
மனிதத்தின் மூளை திறமையாகும்
உயர்வின் விழுமியம் உலகாகும்
ஓயாத வாழ்வே ஒளிர்வாகும்

எத்தனமற்ற எழுதுகோலாய்
ஏளனமற்ற மனித வாழ்வாய்
நுட்பத்தின் வலுவே புரட்சியேடாய்
நோயற்று வாழ்தல் திறவுகோலாய்

மாற்றத்தின் மனதே கதவைத்திற
மறுபடி உலகு நிமிர்வைத் தொட
வெற்றியின் நகர்வில் வீறுதொடு
ஈராறு திங்களின் இலக்கின் குறி
இமயத்தின் வெற்றியும் ஆண்டின் வழி
இலக்கோடு நகர்வோம் இயல்பின் படி.!

மிக்க நன்றி