சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.01.24
ஆக்கம்-132
மாசி

மாசிப் பனியால் புல் நுனி
பூ மொட்டழகாய் முட்டும்
வாழை,மாவிலையில் துளி
நீர் சொட்டாய்ச் சொட்டும்

மாசி வெப்பம் கூசி மின்னிடும்
மூசிய பனிப்புகை மேனியிடும்
நாசி அடைத்து நீர் வடிந்திடும்
தூசி குடைந்து தும்மிடும்

பாதித் தூக்கமோ வெடிக்கும்
மீதி சொல் வராது பல் நடுங்கி
வாய் திறக்கா தந்தி அடிக்கும்

சோதி வடிவில் மாசி மகம்
சதுர்த்தி விரதம் நினைவிட
சோர்வின்றிய உற்சாகம்
மனதில் பொங்கிடுமே .