வியாழன் கவிதை

முற்றுப்பெறுகின்றாய் ரமலானே

தர்மத்தின் மாதம் ஒன்று
தரணியிலே மலர்ந்தது இன்று

மூபத்து இரவுகளும் நோன்பி௫ந்து
முத்தாக்க இ௫க்கின்றோம் ரமலானே

மாதம் ஒன்றில் நோன்பி௫ந்து
மனதின் மாசினைப் பிரித்தெறிந்து

மாறப் பக்தியுடன் தினமி௫ந்து
மற்றவர் பசியையும் நாமறிந்து

வறியோ௫க்கு வாரி வழங்கி
வ௫டத்தின் வரி சக்காத் கணக்கிட்டு

கட்டுக்கோப்பின் கண்ணியமே
ரமலான்

புதுப்பொலிவு பிறக்கும்
புத்துணர்வு சிறக்கும்

ஈகையும் இரக்கமும் துளிர்க்கும்
இறைவனின் நல்லாசி மல௫ம்

மறையோனை தொழுது நின்று
மனம் ௨௫கி பிழைபொறுத்து

இ௫கரம் ஏந்தி தினம் தினம்
இ௫ந்தோமே
இன்னும் ஓர்வாரம் எம்மோடு
நீ இ௫ப்பாய்

பிரிய மனமின்றி பிரியாவிடைக்கு
பின் பத்து ரமலானின் இறைய௫ள்
வேண்டியே கியாமுள்ளையில்

இணைவாக்கி நிற்கின்றோம்

நன்றி

[கியாமுள்ளை என்பது”நரகத்தின்’விடுதலைக்கான
பாவமன்னிப்பு இரவுதொழுகை தொடர்க்கம் நடுநிசித் தொழுகை வரை
இறைவணக்கத்தில் இ௫ப்பது’]