வியாழன் கவிதை

பிஞ்சினை வருத்தாதே

சர்வேஸ்வரி சிவருபன்

பிஞ்சினை வருத்தாதே

கொஞ்சும் மழலைகள் கெஞ்சும் பருவங்கள் //

வஞ்சமில்லாத விளையும் பயிர்களைப் பாரு //
தஞ்சம் கொடுத்து நிற்கவேண்டும் பாரில் //

பஞ்சத்தில் வாழும் பிஞ்சுகளை வதைக்காதே //

கஞ்சமலர் போன்ற முகங்களைக் கருக்காதே //

பதைத்துப் பயந்து பருதவிக்கவும் விடாதே //

சிதைக்கும் மனமும் எப்படித்தான் வருமோ //

ஓடும் பாம்பின் விசமது அறியார் //
ஓட்டம் காட்டும் கிறுக்கு விளையாட்டும் //

காட்டுவாய் கருணையை மீட்டுவாய் உனதுள்ளத்திலே //

சுட்டும் விழிகளைக் கலக்கியே அடக்காதே //

சட்டம் போட்டதுபோல் கம்பெடுத்து அடிக்கின்றாய் //

அறியாத சிறுவரை உனதாளுமையில் வைத்துள்ளாய் //

வக்கிரமும் வாட்டுவதும் வாடாமலர்களுக்கு வேண்டாம் //

கண்பனிக்கப் பார்த்து மகிழவும் என்றுமே //

பிஞ்சினை வருத்தாதே நஞ்சினைக் கலக்காதே //

சர்வேஸ்வரி சிவருபன்