சந்தம் சிந்தும் கவிதை

“நிலாவரை நீரூற்று

நிலாவரை நீரூற்று
நிலாவரை யாழ் நீரூற்று கேணி
நெடும்பாலை மண்ணில் அதை பேணி
குடாநாடு முழுமைக்கும் வாய்க்கால்
கொண்டு சென்றால் பசுமை தரும் சோக்காய்
**புத்தூரால் யாழ்ப்பாணம் போகும்
பொழுதெல்லாம் அதை நோக்கும் யாரும்
இப்பாரின் அதிசயத்தை பார்த்து
எப்படியாம் இது என்பார் வியந்து
**நெடும் தொலைவில் வானில் நிதம் ஒளிர்ந்து
நிற்கும் நிலா போல் ஆழ புதைந்து
இருக்கின்ற காரணத்தை குறித்து
இட்டாரோ நிலாவரை பேர் இதற்கு
**பருவமழை நீர் மண்ணில் ஓடி
படிந்திருக்கும் சுண்ணக்கல் நாடி
வரும் ஊற்றாய் கோடை தோறும் பீறி
வற்றாத கிணறு என்ற பெயரில்
**இடி விழுந்த பள்ளம் என்பாள் பாட்டி
இராவணணார் உதைத்ததென்பாள் பூட்டி
இடையறுந்த காதலர்கள் விழுந்து
இறந்ததனால் பேய்கள் உண்டாம் நிறைந்து
**பாணன் யாழ் மீட்டி பெற்ற பரிசு
பச்சை வற்றி பாழ் நிலமாய் விரிவு
வீணாகும் மழை நீரை தடுத்து
விட குளத்தில் கொட்டும் வளம் நிறைந்து