சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

***** இயற்கை அழகு *****

வானத்து வான்முகில்கள் வாரிவரும்
மாமழை
தேனகத்து சோலைகளாம் தேசத்தின்
கானகம்
நின்றுநீந்தும் மீன்கள் நீலக்கடல்
மன்றில்
குன்றுகளின் ஊடாய் குதிக்கின்ற
அருவி
தென்றல் ஆகி வருமே தெம்மாங்கு
காற்று
வண்டு இசைந்து பாடும் வசந்தத்தின்
பூக்கள்
உண்டு களித்தேறும் ஊர்க்குருவி
வானம்
பண்டு இசை கேட்கும் பச்சைவயல்
கழனி
அண்டம் ஆளுகின்ற ஆதவனின்
அழகும்
என்றும் எம்மையாளும் இயற்கை
இன்பம் தானே