வியாழன் கவிதை

தங்கசாமி தவகுமார்

கவி : பூக்கட்டும் புன்னகை
03. 02. 2022

அந்தி வான அழகு
இயற்கையின் புன்னகை
ஆற்றங்கரை வருடல்
தென்றல் அதன் புன்னகை
மாலைப் பொழுதின் வானவில்
தூறலின் புன்னகை
தாயின் மடியின் தூக்கம்
தாய்மை மூச்சின் புன்னகை
அரிய நம் வரவு
அடுத்தவர் மனதில் பதிந்தால்
அது புன்னகை
அன்பை கொடுத்து
திறந்திடு மனதை
பூத்திடும் புன்னகை
வாழ்வினில் என்றும்!!