சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

https://linksharing.samsungcloud.com/j976kQMkOq2I

சசிச
அடிநாதம்

மனிதநேயமே இவ் உலகின் அடிநாதம் 
தனியொருவனையும் தவிர்திடலாகாது என்கின்றது வேதம் 
புனிதமான பணியிதுவன்றோ நன்மையாகும் யாதும் 
இனிவருகின்ற வாழ்க்கையதும் இழைத்திடுமோ தீதும் 

உடன்பிறந்தோர் வாழ்வைத் தொலைத்து நிற்கின்றார்
குடங்குடமாய் அழுது நாளைக் கழிக்கின்றார்
இடமொன்று அவர்க்கென்று உள்ளத்திலே இருந்துவிட்டால்
தடங்கலின்றி கரமதுவும் அவருக்காக நீண்டுவிடும்

பசித்தவர் பார்த்தும்கூட தானுண்டு மகிழும்
கசிந்து மனமுருகிடாது தான்மட்டும் என்றே
வசிக்கும் வளையாத மனங்கொண்ட
நிலையெதற்கு
விசித்திரமாகவிது இல்லையா முற்றுப்புள்ளி எப்போது

மனவழுக்கைக் களைந்தால் அற்புதங்கள் பிறக்கும்
தனக்கென்று இல்லாமல் குணமிங்கு சிறக்கும்
வணங்கிவிடும் வாழ்வொன்று தரணியிலே தோன்றும்
பிணமான வாழ்வதுவும் உயிர்பெற்று ஊன்றும்
07-03-2023