சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__57

“” திமிர் “”

அன்பும் பண்பும் பாசமும் பக்குவமும்
மனித நேயம்!
அடங்கா பற்றுடன் ஆணவத்துடன்
நடக்கும் செருக்கு பிடித்த
மானிடன் போச்சில் திமிர்!!

போக்கில் அடங்காத அடாவடி
போக்கிலி தன்மை போக்கணம் கேட்ட நடவடிக்கை
போர் மூழ்கவும்
இதுவே காரணம்!!

அவன் நட்ட நாற்றை
இவணோ தன்னது என வாதிடுகிறான்
அகங்காரத்துடன்!!

தலைக்கனமும் கெடுபிடியும் சொற்கேளாது
எண்ணொய் வள நாடுகள்
எல்லைக்கு போர்!!
அதுவே தொல்லையாகி
தோடர்ந்து மக்கள் இடம் பெயர்வு
உயிரிழப்பு உடமை அழிப்பு
திமிரின் உத்வேகம்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
04.03.22

போக்கில்