வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1560!
மாற்றத்தின் திறவுகோல்!

மாறாத்தன்மை கொண்ட மாற்றம்
ஏற்றம் நம்மில் தந்திடும் நாளும்
குற்றம் குறைகள் கொண்ட போதும்
கூன் நிமிர்த்த வேண்டுமே மாற்றம்!

சாற்றும் வெற்றி என்னும் சாரல்
சரிதம் ஆக வேண்டும் திறவுகோல்
புரிதல் நம்மில் உயர்ந்திட வேண்டும்
புன்னகை ஒளியே தெறித்திட வேண்டும்!!

இரும்புக்கூட்டு இதயம் தன்னில்
இளகும் அன்பை இணைத்துக் கொள்ள
கலகம் மாறிக் கருணை சிந்தும்
காலம் தோழமை சூடி வெல்லும்!!

விஞ்ஞான மிரட்சி வினைத்திறனாம்
அஞ்ஞான இருளில் அக விழியாம்
பஞ்சமும் பனியாய் மூடிடவே
பரிதவிப்பில் அல்லாடும் மனிதமாம்!

திறவுகோல் நம்பிக்கை என்றிடலாம்
திறக்குமே கொடையெனும் பெட்டகமாம்
பிறக்கட்டும் புதுவித உத்திகளும்
புவனத்தின் தலைவிதி மாற்றிடவே!!
சிவதர்சனி இராகவன்
45/1/2022