சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

வாழ்க்கைக்கு பணியாகும்
சேவைக்கு பணியாகும்
ஆளுமைக்கு பணியாகும்
அனைத்துக்கும் பணியாகும்

பணியின்றி ஜகமில்லை
பணியின்றி நலமில்லை
பணியின்றி உணவில்லை
பணியின்றிப் பலனில்லை

பணியாலே ஜெயமுண்டு
பணியாலே சிறப்புண்டு
பணிகண்டு பயமுண்டு
பணியின்றி எதுவுண்டு ?

நிலமடந்தை பணியாலே
நிறைந்திடும் வளங்களே
வான்மகளின் பணியாலே
வளர்ச்சியுறும் இயற்கையே
பணி
பணிக்காகவோர் கவிதை
படைத்திடுமோர் பணி
பாரினிலே பலபணிகள்
பாவினிலே ஒலிக்கிறது