வியாழன் கவி
ஆக்கம் 101
மண் வாசனை
புழுதி வாரி எழும்
மண் வாசம்
எந்த ஊர்
புழுதி வாசம் சொல்லு
செம்பாட்டு புழுதி
வாசம் என்று சொல்லு
கால் புதையும்
சேறு
தண்ணீர் குழைந்து
நிற்கும் ஊரு !
செம்பாட்டு மண்
என்று சொல்லுகிறேன்
கேளு !
வாழைக்கு பெயர்போன
வயிராற உண்ண
வைக்கும். ஊர். எது?
வயிராற உண்ண
வைக்கும் ஊர்
வஞ்சகம் செய்யாது
உழைக்கும் ஊரு
நம் நீர்வேலி என்று
கூறு !!
க.குமரன்
யேர்மனி