சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
ஆக்கம் 164

அடைவு

காலை எழுந்ததும்
அன்றைய கேள்வி
மூன்று வேளைக்கும்
உணவு வாங்கணுமே !

கடன் கேட்டு
பல் இளிக்க
பல பேரிடம்
போய் கேட்க
மனமேனோ
சம்மதிக்கவில்லை !

என் பிரச்சனையை
நானே தீர்க்க
எளிய வழி
உள்ள மோதிரத்தை
அடைவு வைப்பதுதான் !

வட்டி குட்டி போட
குட்டி வட்டி போட
முதலை மீட்க முடியாது
மாண்டதே மோதிரம் !!

க.குமரன்
யேர்மனி