வியாழன் கவிதை

கோசல்யா சொர்ணலிங்கம்–

கோசல்யா வியாழன் கவி 3ம் பாகம் 463/
“மாற்றத்தி்ன் திறவுகோல்”
சாவிகள் எல்லாமே சாவுடன் எம்மோடு
பாவிகள் நாமே தான் பூட்டுக்களோடு..
மேவி ஆட்டுகின்ற ஆளுமை ஒடுக்கம் அந்நியமாகா
போட்டிட்ட கொளுக்கி பூட்டு அப்படியேதான்!

விழிப்பு எனும் நாக்கினை தொட்டால்
பூட்டுக்கள் தானே புணரா உடையும்
திறப்பதை மறைத்து ஒழித்து ஒழிந்து கொண்டால்
தலைமுறை தேடல் தொடராய் தொடரும்!

காலங் காலமாய் உறுதி கொடுத்து
தக்கிட வைத்து தகமை தொலைத்து
தடவலில் கையாயிருக்கும் இரும்பை
ஓங்கியடித்திடின் அதிரும் ஆமப் பூட்டும்
உடைந்து நொருக்கி வெளிப்படும் மாற்றம்
மாற்றத்தின் திறவுகோல் !

அதோ மாற்றத்தின் திறவுகோல்..மாதிரி
சாவிகள் வேண்டியதே இல்லை !
கோசல்யா சொர்ணலிங்கம்
ஜேர்மனி..