சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

தலையீடு

பழமையை மறந்து புதுமையில் வாழ்கிறோம்
வழக்கு ஒழிந்து வாழ்வு மாறுது
வழமை என்றால் வாக்குவாதம் வந்துநிற்க
தலையீடு தள்ளிநில் ஒதுங்கிடு – என்று

மனமும் சொல்லிட மாண்பும் மறையுது
இனமும் பழமையை இழக்க நேரிடுது
தலையீடு கொண்டால் பழமை வளரும்
விலையில்லா பழமை செழிக்கும்…

கோசலா ஞானம்.