சந்தம் சிந்தும் கவிதை

“எல்லாளன்”

“கலைந்து போன காதல்”________________________ காற்றலையில் ஊற்றெடுத்து
கண் இமையில் நீர் கோர்த்து
கனக்கின்ற நின் காதல் நினைவு
காலத்தால் கரைந்து போன கனவு.
*நேற்றுப்போல் மனப்பதிவில்
நிற்கிறதோர் மழைப்பொழுதில்
நின்னை ஒரு பயணத்தில் கண்டு
நெஞ்சத்தில் காதல் மூண்டு கொண்டு
*கடிதம் ஒன்று கைமாறி சேர
காதல் சேதி பெற்றோர்க்கு போக
கடுகதியில் மெளனத்தை சுமந்து
காதனை நீ கருக்கினையே பயந்து
*காதலது காய்ந்துலர்ந்து போக
காதல்கணை ரதி ஒருத்தி வீச
ஓயாத அன்பில் என்னை உருக்கி
உட்கார்ந்தாள் இதயத்தில் ஒருத்தி.
*எதிர்பெதற்கும் அஞ்சாச நெஞ்சம்
எமக்குள்ளே கண்டோம் மண மஞ்சம்
தகர்க்க வல்ல எதிர்ப் உறுதி வேணும்
தன்மை கொண்டு காதலினை பேணும்