சந்தம் சிந்தும் கவிதை

-எல்லாளன்-ச.சி.சந்திப்பு216

“தவிப்பு” ச.சி.சந்திப்பு 216

“அவரவர்க்கு ஆயிரமாய் தவிப்பு
ஆதி முதல் எங்கும் தொடர் இருப்பு

**பாலககனாய் இராம பிரான்
பகிடி என்று செய்த வினை
காவியமாய் துயர் தொடராய் ஆகி
காடு சிறை போர் சீதை தீயில்”

** “மந்தரையின் கூன் முதுகில்
பந்தெறிந்து விளையாட
வந்தவினை கைகேயி ஆகி
வரம் இரண்டால் முடியாட்சி மாறி”

**ஆட்சிக்கட்டில் ஜெயலலிதா ஏறி
ஆசைகூடி நண்பியாலே மாறி
வீட்சி கண்டு கூட்டாக சிறையில்
விதைத்த வினை யால் இன்றும் கறையில்.
**தன் தங்கை காந்தாரி
புண் கண்ணன் மனையான
வஞ்சினத்தால் தாய்மாமன் சகுனி
வரவைத்தான் போரை ஊதி மகுடி.

**கன்னி குந்தி பெத் தெறிய
கர்னன் வாழ்வு திசை தவறி
தம்பி கையால் அம்பு பட்டு சாவு
தவறுகளால் அவரவர்கள் தவிப்பு”

-ப.வை.ஜெயபாலன்-