வியாழன் கவிதை

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 169
அமைதி
தூக்கமும் ஓர்வகை அமைதி
கிடைக்காமல் அவதியில் பலர்
குளிசையின் உதவியுடன்
அமைதி தேடும் நிலை

அவசரமாய் தேடுது ஐரோப்பா
போர் இல்லா அமைதியை
விட்டுக் கொடுப்பால் வருமது
எதிர்பார்ப்போமே நாமும்

நீ செய்யும் நற்செயலால்
மனம் அடையும் அமைதி
குறை காணாதே யாரிடமும்
வரும் உனக்கு அமைதி
நன்றி
வணக்கம்