வியாழன் கவிதை

அருண்

அருண்குமாா்

காரிருள் ஓட கலகலப்பை நாட
பேரிருள் கலைந்து பகலவன் வரவும்
தேரிழுக்க மாந்தர் தினமும் நாளெண்ண
வாரிச் சுருட்டி விரைவாய்ப் பனிகலைய

வசந்தமே வந்திடு வெளிச்சத்தைத் தந்திடு
கசப்பாய் இருக்குது காரிருள் மூட்டம்
உசுப்புது உடலை உபாதைகள் பெருகி
பசுமையைத் தேடுது பகலவனை நாடுது