வியாழன் கவிதை

அபி அபிஷா

அபி அபிஷா – 04

தலைப்பு = தமிழ் மொழி

என் தாய்மொழி என்னை தூங்க வைத்துத் தாலாட்டிய மொழி .

மொழி என்ற சொல்லை அழகு படுத்தியது தமிழ் மொழி.

இனிய தமிழ் மொழி என் எண்ணமெல்லாம் நிறைந்த மொழி .

இம்மொழியை கம்பன் என்ற கவிஞன் கவிதைகளாகப் பொழிந்தான்.

கண்ணதாசன் எனும் கவியரசனும் இத் தமிழ் மொழியை புகழ்ந்து பாடியுள்ளான்.

இவ்வாறு மக்களின் வார்த்தைகளால் பல வடிவத்திலும் பல கருத்திலும் உருவாகிய தமிழ் மொழியே என் மொழி.

– அபி அபிஷா இலங்கை