சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி… கவிதாசன்.

தலைப்பு !
“ கண்கண்ட தெய்வங்கள் பெற்றோரே”

தரணியாழ உயிரீந்த தெய்வங்கள் பெற்றோரே
தந்தைதாய் தந்தனரே சொந்தங்கள் மற்றோரே //

வரம்தருவார் சந்ததிக்கு வாழையடி வாழையாய்
வந்தருள் புரிந்திடுவார் வாழ்வுதந்து
வேலையாய் //

சிரம்தாழ்த்தி பணிந்திட சிகரமும் தொட்டிடலாம்
சிந்தையுடன் செயல்பட சிவலோகம் கண்டிடலாம்//

கரம்கூப்பி வணங்கிடும் கண்கண்ட தெய்வங்கள்
காசினி கண்டிட கரைந்திடும் பாவங்கள்//

நடமாடும் கடவுளாம் நம்முன்னோர் இல்லத்தில்
நாமுயர பாடுபட்டு மனம்சுவைப்பர் உள்ளத்தில் //

தடமாறி நடக்கையில் திருத்திட கண்டிப்பர்
தன்சொல் மீறிட தவறாமல் தண்டிப்பார்//

இடம் பொருள் பாராமல் இன்னலை போக்கிடுவார்
இரவுபகல் ஓயாமல் இருளினை களைத்திடுவார் //

திடமான வாழ்விற்கு திரியாகி ஒளிதருவார்
திரவியம் தேடிட தினம்தோறும்
வழிதருவார்//

இல்லக் கோயிலின் இருதெய்வம் பெற்றோரே
இதயத்தில் தரிசித்து பூசிக்க கற்பீரே//

செல்லக் குழந்தைகளாய் சிரித்து ரசிக்கையிலே
சொல்லால் மகிழ்வித்து சுகப்பட ருசிப்போமே //

இல்லை… சொத்துசுகம் என்றபோதும் மதிப்போமே
இப்பிறப்பைச் சொத்தாக்கி இகத்தினில் விதைப்போமே //

நல்லதோர் வாழ்விற்கு நம்பெற்றோரைக் குருவாக்கு
நாள்தோறும் ஒளிர்ந்து நலம்பெறும் தெய்வவாக்கு //

அபிராமி ( கவிதன் )