சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் வாரம்…. 07.02.2022
தலைப்பு !

“ தமிழை வாழ்வியலாக்குவேன் “

தமிழை வாழ்வியலாக்குவேன் என்னும்
தாரக மந்திரத்தை தன்னுள்ளே இயற்றி
அல்லும் பகலும் அயரா உழைப்பில்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈந்து

இளையோர் பயலும் பாமுப் பள்ளி
இலக்கினை நோக்கும் இலட்சியத் தளமாம்
இதயத் துடிப்பாய் இயக்கும் அதிபரும்
இடையறா வெற்றியின் பாதையில் பயணமே

வள்ளுவன் பாரதி வரிசையில் நின்றே
வளர்த்திட துடிக்கும் வள்ளல் என்றே
உளத்தின் உறவுகள் உரைப்பதும் நன்றே
தளத்திற்கு பெருமை தந்ததே வென்றே

ஒருகரம் ஓசைஎழுமா இணைவோம் பலகரமாய்
தனிமரம் தோப்பாகுமா ஒன்றை பலவாக்குவோம்
தமிழை வால்வியலாக்குவேன் தத்துவ வரியது
தமிழேதாய்மொழி படைப்பாள் வளர்ப்பது உரிமையது !

நன்றி பாவை அண்ணா 🙏