சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக..

காப்பு பாடல்
குறள் வெண்செந்துறை:

அன்னையும் தந்தையும் ஆசியும் தந்திட
என்னருமை குருவையும் எண்ணத்தில்
ஏற்றி

என்றனின் குருவடி ஏந்தியும் தொழுதேன்
நின்றெம்மை காப்பாயே நித்திலம் சூடி

கந்தனே முருகா கதிர்வேல் அழகா
சிந்தையில் வந்தே சிந்தனை தருவாய்

குன்றினில் ஏற்றியே குருவேல் ஏந்திடும்
மன்றம் மணக்கும் மயிலோனே காப்பாய் ..!

நன்றி 🙏