மாவீரரே
கார்த்திகை வந்தாலே
கண்ணீராய் நனைந்திடும்
கல்லறைகள் எல்லாம்
ஒளியாய் காட்சிதரும்
காரிருள் சூழ்ந்திடும் வீரருக்காய்
காசினி பொழிந்திடும்
தூறலாய்
காந்தள் மலருமே
தூய்மைக்காய்
காரணன் சொல்லிட்ட
வாய்மைக்காய்
காலங்கள் ஓடித்தானும்
செல்லுதே
காரிகை அகமும்
துடிக்குமே
ஞாலத்தில் காவியமாய்
நிலைபெறவே
கனவுகள் நிலைத்திட
பாலமாய் நாமும்
செல்வி நித்தியானந்தன்