சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

ஆற்றல்

ஆற்றல் என்பது
அவரவர் தனித்திறமை
ஆணிவேராய் பற்றி
அவனியில் திறமையானரே

ஆளுமை ஏற்ற
இறக்கமாய் பற்றிக்கொள்ளும்
அடங்கா மனிதரும்
தோல்வியை தட்டிக்கொள்வாரே

இலட்சியம் காணவே
இரவு பகல் கணியார்
இறுமாப்பாய் இறுதிவரை
எவருக்கும் பணியார்

ஆற்றல் இருபாலுக்கும் உண்டு
தூற்றல் துன்பம் எனக் கொண்டு
போற்றல் என்றென்றும் நன்றே
ஏற்றலாய் வெற்றி வாகை சூடியே