வியாழன் கவிதை

Selvi Nithianandan

வந்ததே பூகம்பம் வாடுதே உயிர்கள் (555)

தென்கிழக்கு துருக்கியுடன்
சிரியா எல்லையிலே
தொடர்ந்துவிட்ட பூகம்பம்
ஏழைத் தாண்டியதே இப்போ

கட்டடங்களின் தரைமட்டப் பிளவு
பழமையான கோட்டை தகர்வு
கனதியாய் பலியான உயிர்கள்
கணக்கிட முடியா வேதனைகள்

பலநாடுகள் உயிர்மீட்பு உதவிகள்
மருந்துகள் உணவுகள் ஆடைகளாய்
உதவிடும் நல் இதயங்கள்
உறக்கம்மில்லா கடும்பனியிலும்
வீதியிலே நிற்கும் உயிர்கள்

ஒரேநாளில் பலமில்லியன்
வங்கி இலக்கச் சேமிப்பு
ஒவ்வொரு நிமிடமும்
பலி எண்ணிக்கை அதிகமாகுதே