, 09-05-2024 Selvi Nithianandan : அன்னைக்குநிகருண்டோ அவனியிலே
காலமும் எமக்காய்
வாழ்ந்து
கண்அயரா வலிகளை
சுமந்து
நேரமும் எமக்காய்
அர்ப்பணித்து
நேர்த்தியும் பலசெய்து
நெஞ்சினில் தாங்கியவர்
பசிதனை மறந்து
பணிவிடை செய்து
ருசிதனை துறந்து
உணவினை உண்டு
தன்னிலை மறந்து
தம்மகவுகள் கண்டு
தரணியில் உயரவே
தாங்கிய தூணானார்
: கருவறை சுமந்தவர்
கல்லறை ஆனார்
ஆண்டுகள் ஜந்தும்
அடங்கிடா வலியும்
மாண்டவர் மீண்டும்
வருவார் என்னும்
நினைவுகள் மறவாது
நித்திலம் வாழ்தல்நன்றே