சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

அன்னையர் தினமதாய்

ஆண்டுதோறும் வந்திடும்
அவனியிலே சிறந்திடும்
அகமும் மலர்திடும்
அன்னைக்கென்ற நாளாகும்

அமெரிக்காவிலே ஆரம்பம்
ஆசியா ஐரோப்பாவிலும் கொண்டாட்டம்
அன்னைகளின் அர்ப்பணிப்பும்
அடையாளத்தின் சின்னமாகும்

பூக்கள் அட்டைகள் விற்பனைகள்
பரிசுகளாய் கடைகளில் நிறைந்திடும்
பூரிப்பாய் மகவுகள் காத்திடும்
புனிதமாய் அன்னையை போற்றிடுவோம்