சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

இல்லையேல்……
காலத்தின் கரிசனை
காத்திடம் உழைப்பு
காசினியை மெருகேற்றும்
கடமையின் விதைப்பு
அழகுறு அகிலத்தை அலங்கரிக்கும் சிறப்பு
தினமாகும் தினக்கூலி
தேசத்தின் முதுகு
வளமாக்கி உலகாளும்
வருமானச் செறிவு
எதற்குமே மூலதனம்
தொழிலாளி இணைப்பு
இல்லையேல் உலகநிலை
எதுவாகும் உணர்த்து!
நன்றி