வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

வேண்டும் வலிமை

வலிமை வேண்டும் வாழ்வில்
வலிகள் நீக்கி எழ வேண்டும்
மலியும் துன்பம் அகற்றி
மனதில் தெம்பு நிறைய வேண்டும்

அகத்திலே வாழ்வு அணைத்திட
இகத்திலே மேன்மை அடைந்திட
நிஐத்திலே நிம்மதி கிடைத்திட
வேண்டும் வலிமை வேதனை தீர்க்க!

சிறப்புக் குழந்தைகள் சீரிய வாழ்வுடன்
திறமை மேலோங்கிட வாழணும்
வாழ்விலே ஆற்றலும் ஆளுமை உயரணும்
தாழ்விலா வாழ்வு தரணியில் கிடைக்கட்டும்

தளராத நம்பிக்கை துவளாத துன்பம்
நிகழ்கால வாழ்வில் நிதமாய் அமையட்டும்
சிறப்புடன் ஆற்றல்கள் சிக‌ரம் தொடட்டும்
சிந்தனையின் மேம்பாடு விந்தையாய் எழட்டும்

நகுலா சிவநாதன்1668