சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் வாரம் 182 26.7.2022

தலைப்பு !
துணிவே துணை”
துணிவே துணையாய் தூணாய் நின்றவள்
பணிவாய் மனத்தினில் பதியம் போட்டவள்
எண்ணிய செயலினை எளிதினில் முடித்தவள்
திண்ணமாய் நின்று திறமையை போற்றியவள்

தன்கையே தனக்குஉதவி தைரியம் காத்தவள்
தென்றலுடன் கவிதையில்தெம்மாங்கு இசைத்தவள்
புன்னகை அகம்முகம் பூரிக்க வைத்தவள்
மன்றினில்்பாமுகம் மனத்தினில்வி தைத்தவள்

நித்தமும்்தென்றலாய் நிகழ்வினில் வீசுவாள்
மொத்தமும் தாங்கிய முகத்துடன் பேசுவாள்
எத்தனை தடையையும் எதிர்கொண்டு நாடுவாள்
தத்துவப் பெண்ணவள் தரணியை ஆளுவாள்

நன்றி வணக்கம் 🙏