சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

நட்பென்றால்

ஒத்த உனர்வுடன் செயற்படும் குணங்கள்
சுத்தத்தின் மொத்தமும் இருந்திடும் மனங்கள்
நித்தமும் ஒருவரோடொருவராய் பிரியாத கணங்கள்
மித்திரன் அருகிலே மெய்ப்படாதோ தினங்கள்

ஒரு வயிற்றில் பிறக்கவில்லை இருந்தும் பரிவு
உறவுகளுள் உன்னதவுறவு வருமோவங்கு பிரிவு
எந்தநிலை வரினும் கோர்த்த விரல்கள் கோர்த்தவைதான்
சொத்தாய் நண்பன் இருக்கையிலே கவலையும் ஏன்

பனித்துளி போன்றிருப்பார் சொந்தங்கள் வடிவில்
தனித்துவமாய் தோழனோ அவர்களின் நடுவில்
இறக்கும் வரைக்கும் பிரிக்கமுடியாத ஒன்று
சிறப்பாக வாழுவோம் நட்பினைக் கொண்டு

ஜெயம்
23-07-2022