சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 175
“தீயில் எரியும் எம் தீவு”

எந்தையரும் அன்னியரும் ஆயிரமாண்டாய் போற்றிவந்த எமதருந் தீவு
இன்று கிரகணம் பீடித்த சூரியனாய் ஒளியிளந்து போனதேன்.?
தாயை விற்கும் தனயரின் ஆட்சியும் உழைக்காமல் உண்ண விழையும் குடிகளின் மாட்சியும்
நாடு நலங்கெட நாட்குறித்தலும் வேண்டுமோ.?

இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையம், இயற்கைத் துறைமுகம் கடலோடிகளின் பாதுகாப்புக் கவசம்.
சீனப்பட்டுக்கள் அலங்கரித்த மாளிகை உப்பரிகைகள்
இன்றோ கடன் வசூலிக்கும் சீனப்பட்டாளம் நாடு முழுதும்
கடல் நடுவில் எரிவது எம் தீவல்ல சிங்களவரின் ஆணவம்.

இயற்கை உவந்தளிக்கும் வளமோ தன்னிறைவு காணும்
இதற்கு மேலும் உனக்கென்ன வேணும்.!
காவி உடுத்து மடத்தில் உண்டுறங்கி “பிரித்” ஓது அதுபோதும்
மோட்டைத்தலை முடிகேட்பது பௌத்த நிந்தனை அறிவாய்.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.