சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

போராட்ட நோக்க புனிதம்
போய் ஜனாதிபதி மாளிகை புகும் வரை புனிதம்
போனதே திருடுகள் போனதால்
எழிற்சியின் மகிமை
போராட்டகாரரின் ஆதரவாளராய்
அடையாளம் காட்டிய ரனிலார்
போராட்டத்தாலேயே பெற்றார் பதவி ரனிலார்
இன்று போராட்டக்காரரை போடுரார் சிறையிலே ரனிலார்
ஆட்டத்தை இஷ்டப்படி ஆட முடியாது அவரால்
காவடி ஆட்ட முதுகு செதில் கயிறு
மொட்டுக்காரர் கையில்
இவரது ஆட்டமும் இடையிலே முறியும்
இலங்கையின் எதிர் காலம்
இருளிலே நீளும்
அதிகார திமிரும்
ஆசன ஆசையும் அகலும் வரை