சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு –
இதய தெய்வம்
இல்ல கோயிலின்
இதய தெய்வம் சொல்லா துயரின் சோகத்தை தந்திட்டார்.

நடமாடிய தெய்வம்
நடைமறந்த தருணம் இடமறியா தடமாற இருள்சூழ்ந்த கோலம்

நோயின்றி நொடியின்றி நொடியினில் மரணம் வாயிருந்தும் வார்த்தையில்லை
வாயடைத்து நின்றோம்

கண்ணிமைக்கும் நேரத்திற்குள்
கண்ணீர் அஞ்சலி சம்பவம்
எண்ணத்தின் தாக்கத்தை
எழுதிவடிக்க ஏக்கமே

பாமக உறவுகள் பந்தலிட்டு ஆறுதல் பூமுக அகத்தினர் புனிதம் காத்தனர்

எல்லை தாண்டியே எண்ணற்ற உறவுகள் சொல்லிய ஆறுதல் சோகம் மறந்தன

நன்றி வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா