வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

அகத்தின் உணர்வை
தொடுக்கும் தாய்மொழி

உள்ளத்தின் உணர்வினை உய்த்து ஆய்ந்து
உளத்தின் தொடுகையை உவப்பாய் மொழிந்து
வாழ்வியல் வளத்தை நலமுற தொடுக்கும்
அகத்தின் மொழிஇது தாய்தமிழாம் தமிழ்மொழி

தொலைத்த குழந்தைகள் நெஞ்சைத் தொடுவதுமில்லை
அன்பின் உணர்வினை. கலப்பதும் இல்லை
உறவின் பரிவினை உயிர்ப்போடெழுதிட
முயன்றும் முடியா விலங்கினை இடுவார்

அருகினில் இருந்தும் விலகிடும் உறவாய்
தலைமுறை இடைவெளி தாக்கம் நிறைக்கும்
நாவினில் தாய்மொழி தளமிட மறுக்கும்
புலத்தள தொடுகையில் புலனது விரியும்

அம்மா என்பதில் அசைந்தெழும் பரிவு
அனுதினம்அத்தனை பகிர்வும் மொழிவுற
உணர்ந்து உயிர்த்து எழுதிடும் வாழ்வு
இறந்தும் இறவா பதிவினைத் தொடுக்கும்