சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.04.2023
கவிதை இலக்கம்-218
சுடர்
——-
உலகிற்கு சூரிய ஒளிச்சுடர்
உயிரினங்களுக்கு நிறை பேரொளியே
சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மா
பாரதியின் கவிதை வரிகளே
தியாகச்சுடர் திலீபன் இறப்பு
தமிழினத்தின் அழியா முத்திரை பதித்ததே
தீபச்சுடர் மேரி கியூறி அம்மையார்
மருத்துவம் மாண்பு பெற்றதே
ஈகைச்சுடர் மாவீர மணிகளின்
கார்த்திகை நினைவாகிறதே
அணையாச் சுடராய பெற்றோர்கள்
நல் வாழ்விற்கு பேரொளியானதே