வியாழன் கவிதை

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-06.03.2023
கவிதை இலக்கம்-1670
நிரந்தரம்
—————-
மனித வாழ்வில் எதுவுமே
நிரந்தரம் என்பது கிடையாது
இன்றிருபபோர் நாளை இல்லை
இன்ப துன்பம் மாறி மாறி வரும்
துவண்டு விடாமல் எழும்புதலே
வாழ்வோருக்கு நல்ல சாதனையே
தனித்து வாழ்வோருக்கு என்றும்
சோம்பல் நிரந்தரமானதோ
உழைத்து வாழ்வோருக்கோ
நிம்மதி என்றும் உயர் தரமே
கூட்டுக் குடும்ப வாழ்விற்கு
சமத்துவம் என்றும் ஆதாரமே
சோதனை பலதும் வந்திடினும்
சாதனை படைத்திட முயல்வதும்
நேரம் ஒதுக்கி பலதை செய்வதும்
உழைப்பில் பலன் பெறுவதும் சரித்திரமே
ஆரோக்கியம் வாழ்வில் நலன் ஆதாரமே
உணவு அப்பியாசம் வாழ்வில் நிரந்தரமே
தனிமையில் வாழ்வும் தனி சுதந்திரமே
சுதந்திரம் வாழ்வில் கிடைப்பது நிரந்தரமே
நிரந்திர வாழ்வில் புது வாழ்வு கிடைப்பது
இறைவன் கொடுத்தது பெரும் வரமே