சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.05.2022
கவிதை இலக்கம்-173
உழைத்தே உயர்வோம்
——————————-
உலகை படைத்த இறைவன் படைப்பபாளி
இயற்கையின் வனப்பில் வாழ்பவன் பணியாளி
உழைத்து வாழ்வில் உயர்பவன் தொழிலாளி
உழைக்காது உறங்குபவன் கடனாளி
நாட்டுக்காய் உழைத்து மரணித்தவன் போராளி
வரலாறு படைத்து விட்டு மறைந்தவன் பெயராளி
ஆதிக்க வர்க்கத்தில் அரசை ஆள்பவன் முதலாளி
கடும் பணியில் வியர்வையில் உழைப்பவன் தொழிலாளி
ஆக்கங்கள் எழுதி பாராட்டு பெற்றவன் படைப்பாளி
பட்டங்கள் பெற்று பலதையும் அறிந்தவன் அறிவாளி
உறக்கத்தில் தூங்குபவன் நோயாளி
உல்லாச வாழ்வில் இன்பம் காண்பவன் அதிஐ்டசாலி