பாமுகம் நேரலை | Live Broadcast

Subscribe
Notify of
guest
1.1K Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Kandasamy Segar
Kandasamy Segar
5 hours ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 

வாழ்வின் உண்மை 232 வது வாரத்திற்கான தலைப்பு

முதல் சேவை

இதுவரையில் யாரும் செய்திராத முதல் முதலில் உங்கள் கிராமத்தில் நீங்கள் ஆரம்பித்த சேவை பற்றி 
உங்கள் அனுபவக் கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன்
அழைக்கின்றேன்.

இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
6 hours ago

உற்சாக வணக்கம்
எமக்காக மரணித்த அனைத்துப் போராளிகள்
மாண்புபோற்றும் திங்களின். தொடுகையுடன் பலநிகழ்வுகள் தொடராகவும் படைப்புகள் சமர்ப்பண அஞ்சலிப்பு என இளையோர் ஆக்கப்படைப்புக்கள் அனைத்தும் வலுவே பாமுகத்தின் நீண்டதொடராண்டு பணிக்கு வாழ்த்துக்கள் நன்றி
தொடரும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள். நன்றி

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
1 day ago

உற்சாக வணக்கம்
எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகளின் மாண்புபோற்றும் திங்களின் சிறப்பும் ஆக்கங்களின் படைப்பும்
அளப்பெரிய தியாகத்தின் ஈடிணையற்ற வலுவும் சுமந்த கார்த்திகை 27 ன்
உயிர்ப்பு உன்னத நாளின் மகுடமும் போற்றி தொடரும் நிகழ்வுகளுக்கு
பாராட்டுக்கள் நன்றி.

கார்த்திகை 27….
சிந்தை நிறைந்த தியாகப் பேரொளிகள்
செதுக்கிடும் ஈழத்தின் யாகக் கல்லறைகள்
ஈடுகொடுத்தே இன்னுயிர்
ஈர்ந்த வள்ளல் பெருந்தகையீர்
வரமது போற்றும் கார்த்திகை 27 அலையெனத் திரண்டு அஞ்சலிக்கும் மாபெரும் நாளே
மண்ணினை மீட்க மதிப்பீர்ந்த வீரர்கள் சங்கொலி வியாபிக்கும்
கார்த்திகை இருபத்தியேழே
கண்ணீர் பூக்கள் சமர்ப்பணமாகும் காந்தள் மலர்கள் அர்ப்பணமாகுமே!
நன்றி

வாணியின் தொடர் பணிக்கும் பாடல் வரிகளை பாடிய தவமலரக்காவின் சிரத்தை மிகு தொடர்ச்சிக்கும் மிகுந்த நன்றிகள்

Jeya Nadesan
Jeya Nadesan
1 day ago

கேள்வி வாரம்-400
01-பிரேசில்
02-தகவலை சேமித்து வழங்க பயன்படுத்தும் கருவி
03-05.11.2003

DAVID
DAVID
1 day ago

David Anthony Says:15:10
26/11/2023,
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட 
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-34ம் ஞாயிறு, 26/11/2023.

நற்செய்தி வாசகம்:
——————————
“அப்பொழுது இயேசு, மிகச் சிறியோராகிய இவர்களுள் 
ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாகஉங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார்.”என்றார்.
(புனித மத்தேயு:25:45)

சிந்தனைக்கு:
——————————
   “இரக்க செயல்.”
——————————
 சகோதர, சகோதரிகட்கு! 
நாம் செய்கின்ற இரக்கச்செயல்கள் அனைத்தும் நம்மை விண்ணரசில் உயர்ந்த இடத்திற்கு கொண்டுசெல்பவை. எளிமையானவர்களாக, இரக்கமுள்ளவர்களாக, தேவையில் இருக்கிறவர்களுக்கு உதவுகிறவர்களாகவாழும் வரம் வேண்டி இறைவனிடம் மன்றாடுவோம்.
ஆகவே, 
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
2 days ago

உற்சாக வணக்கம்
எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகளின் மாண்பு போற்றும் திங்களில்
நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள் .நேற்றைய பொழுதில் சிறப்புடன் இணைந்தவர்கள் பாராட்டுக்கள். இளையவர்கள் உற்சாக ஆக்கங்களுக்கும் தொகுப்புகளுக்கும் வாழ்த்துக்கள்

தொடரும் நிகழ்வுகளுக்கும் மிக்கப் பாராட்டுக்கள்

Selvi Nithianandan
Selvi Nithianandan
2 days ago

கேள்வி வாரம் 400
1. 1000க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட இரண்டாவது நாடு எது?
2. ஊடகம் என்றால் என்ன?
3. சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை எப்போஉறுதி செய்யப்பட்டது?

DAVID
DAVID
2 days ago

David Anthony Says:16:27
25/11/2023,
Saturday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட 
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-33ம் வாரம், 25/11/2023,
சனி
நற்செய்தி வாசகம்:
—————————
அக்காலத்தில் இயேசு கூறியதாவது:”மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக்கூறியிருக்கிறாரே, 
அங்கு அவர் ஆண்டவரை, ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.”
என்றார்.
(புனிதலூக்கா:20:37-38)

சிந்தனைக்கு:
——————————
    “நிலை வாழ்வு.”
——————————
சகோதர, சகோதரிகளே! இம்மண்ணகத்தில் கடவுள் நமக்கு வழங்குகின்ற உயிர் அவர் தருகின்ற கொடை. அதுபோலவே, நிலை வாழ்வை வழங்கும் கடவுள் நமக்குத் தம்மையே கொடையாக அளிக்கின்றார். எந்நாளும்வாழ்கின்றவர் கடவுள் என்பதால் நாமும் நிலை வாழ்வில் பங்கேற்போம்.
ஆகவே, 
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
4 days ago

உற்சாக வணக்கம்
வெள்ளி நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.

காலவேட்கையில்
மாவீரர் சரிதம்
மண்மீட்பின் தாகத்தின்
மகத்துவ பயணம்
காவுகொண்ட உயிர்பலி
அவலத்தின் அனர்த்தங்கள் இடம்பெயர் வாழ்வு
அடிப்படைத் தேவைகள்
இல்லாது அனுதினம் போரின் வதையில் புதையுண்டோர் துன்பியல் சமூகமாய்
நம்மின வலிகள் ரணமாய் கணமாய்
நாளும் சுமக்கும் வலி போக்கி வழி காட்டும்
வலுப்படுதலே ஈகை!

நன்றி

DAVID
DAVID
5 days ago

David Anthony Says:11:45
23/11/2023,
Thursday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-33ம் வாரம், 23/11/2023,
வியாழன்.
நற்செய்தி வாசகம்:
—————————« அக்காலத்தில் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை என்றார். »
(புனித லூக்கா:19:41,44)

சிந்தனைக்கு:
——————————
“தேடுதல்”
——————————
சகோதர, சகோதரிகளே! நமது வாழ்விலும், கடவுள் நம்மைத் தேடி வந்து கொண்டே இருக்கிறார். நம்மை பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க, நமது துன்பங்களிலிருந்து மீட்டெடுக்க, அவர் நம் அருகே நின்று கொண்டேயிருக்கிறார். நாம், அவரைத் தேடுகிறோமா? சிந்திப்போம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
5 days ago

உற்சாக வணக்கம்
விடுதலை வேட்கை
விடியுமென நம்பிக்கை
அடையும் இலக்கில்
ஆயிரம் தடையிலும்
எழுகையே உறுதியாய்
என்றும் மனிதமே முதன்மையாகக்
உரமிட்ட வீரரின் உன்னதம் போற்றுவோம்.
மாண்புடன் தலை சாய்த்து மதித்தொருகால் நன்றி மலர் தூவி நினைவினை ஏற்றுவோம் . நன்றி

மிக்க நன்றி வாணி தொடர் பணிக்கும் நன்றி

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
5 days ago

உற்சாக வணக்கம்
தொடரும் நிகழ்வுகளும் தொகுப்புகளும் வீரியம் நிறைக்க 1246 வாரத்தின் உயர்வுடன் கவிதைநேரம் இலண்டன் தமிழ்வானொலியின் சரிதம் சான்றாக 1250. ம் வாரம் நோக்கி வீறுநடை போடுகிறது. தனித்துவ தொடராக பயணிக்கும்கவிக்களத்தின் உயர்வுக்கு
மிகுந்த பாராட்டுக்கள்.
1250 கவிவாரம் 14.12.23 பிரசவம் காணும் அன்றைய பொழுது கரமிணைக்க விரும்புவோர் உங்கள் எண்ணச்சிந்தனையை இங்கு பதியமிடலாம். இது எனது தாழ்மையான பகிர்வே நன்றி
மிக்க நன்றி

DAVID
DAVID
6 days ago

David Anthony Says:12:17
22/11/2023,
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-33ம் வாரம், 22/11/2023,
புதன்.
நற்செய்தி வாசகம்:
——————————அக்காலத்தில் இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். மக்கள் அவர் சொன்ன உவமையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவரோ, உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.”
(புனித லூக்கா:19:11,26)

சிந்தனைக்கு:
——————————
“ சுயநலம் “
——————————
சகோதர, சகோதரிகளே! நாம் வாழக்கூடிய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இங்கே திறமைகளை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். “சுயநலத்தோடு”வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறி, அனைவரும் சிறப்பாக, இந்த உலகத்தை, கடவுள் கொடுத்திருக்கிற திறமைகள் மூலமாக மெருகேற்ற வேண்டும். அதற்கு நாம் முழுமையாக முயற்சி எடுப்போம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்

Selvi Nithianandan
Selvi Nithianandan
6 days ago

கேள்விக் கணைகள் புள்ளிகள் 21.11.2023)

ஜெயா நடேசன் 37
பத்மினி கமலகாந்தன் 42+5
நகுலவதி தில்லைத்தேவன்27
சிவதர்சினி இராகவன் 05
சிவமணி புவனேஸ்வரன் 37 +5
வாணி நடாமோகன் 52
சறோஜினி சோதிராஜா 39
நேவிஸ் பிலிப்ஸ் 05
ஜெசி மணிவண்ணன் -32+2
ராஜினி அல்போன்ஸ்- 29+2
லோஜினி முகுந்தன் 41+2
ராதிகா ஜங்கரன்
இரட்னேஸ்வரி மனோகரன்
சாந்தினி துரையரங்கன் 05

DAVID
DAVID
6 days ago

David Anthony Says:16:10
21/11/2023,
Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி

உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட 

நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”

இறைவன் குரலில்:
——————————

பொதுக்காலம்-33ம் வாரம், 21/11/2023,
செவ்வாய்.
நற்செய்தி வாசகம்:
——————————
அக்காலத்தில் இயேசு சக்கேயுவை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கின்றார் என்றார்.”
(புனித லூக்கா:19:9,10)

சிந்தனைக்கு:
——————————
  “பலவீனம்”
——————————
சகோதர, சகோதரிகளே!
சக்கேயு தனது பலவீனத்திலிருந்து எழ முடிந்தது என்றால், அதற்கு முழுமையான காரணம், அவன் கடவுளின் ஆற்றலின் மீது வைத்த நம்பிக்கை. கடவுளால் எல்லாம் ஆக முடியும் என்று நம்பினான். அதைச் செய்து முடித்தான். நாமும் கடவுளின் அருள் வேண்டி மன்றாடுவோம்.
ஆகவே, 
இறைவா! உமக்கே புகழ்!

உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,

டேவிட்.( பிரான்ஸ்

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
7 days ago

உற்சாக வணக்கம்
மாண்பு போற்றும் திங்களின் நிகழ்வுகளுக்கும் இளையோர் தொகுப்புகளுக்கும் பாராட்டுக்கள்.

வீரம் போற்றும் மாண்பும்
விடுதலை உணர்வின் செறிவும்
உரமாய் ஈர்ந்தோர் ஈகை
போற்றும் வாழ்வே சரிதம்
ஈகை நிறைந்த கொடையின்
ஈடிணையற்ற தியாகச் செம்மல் நீவிர்
மறவாது வாழ்வோம் மண்ணில் !
நன்றி

பாடலுடன் இணைந்த சிறப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி

Kandasamy Segar
Kandasamy Segar
7 days ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 

வாழ்வின் உண்மை 231 வது வாரத்திற்கான தலைப்பு

ஏமாத்து

சமகாலத்தில் ஏமாத்தி வாழ்பவர்கள் அதிகரித்து செல்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

உங்கள் அனுபவக் கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.

Jeya Nadesan
Jeya Nadesan
7 days ago

பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிதான காலை வணக்கம் இறையன்புடன்.இன்றைய நிகழ்வுகளில் பங்கு பற்றி சிறப்பிக்கும் இளையோர் பெரியோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தொகுப்பாளினி கலைவாணி மோகனுக்கும் நன்றி
இன்றைய பயனும் பகிர்வும் நிகழ்விற்கு யாழ் கைதடி நாவற்குளி
தமிழ் கலவன் பாடசாலை உப அதிபர் இலகுமீகரன் சீவரத்தினம் பகிர உள்ளார் அன்பு உறவுகள் வாழ்த்துக்கூற அழைக்கப்படுகின்றீர்கள்
வாழ்த்துக்கூற

Jeya Nadesan
Jeya Nadesan
7 days ago

இனிதான காலை வணக்கம்

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
8 days ago

உற்சாக வணக்கம்
எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகளின் மாண்பு போற்றும் திங்களின் சிறப்பும் ஆக்கங்களின் செறிவும் இளையோர் உருவாக்கப்படைப்புகளும் நிறைமதியாய் தொடர தொகுப்புக்களில் இணையும் தொகுப்பாளர்களுக்கும் நிறைந்த பாராட்டுக்கள்.
நன்றி

வீரத்தின் செறிவும்
விடுதலை உரமும்
காலத்தின் பொறுப்பும்
கடமையின் வியூகமும்
உயிரின் கொடையாய்
அர்ப்பணித்த மாவீரம்
அறம் காத்த போர்வீரம்!
நாளும் மறவாது
போற்றுதல் நம்கடனாகுமே!
நன்றி

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
9 days ago

உற்சாக வணக்கம்
எமக்காக மரணித்த அனைத்துப் போராளிகள்
மாண்புபோற்றும் திங்களின் சிறப்புடன்
தொடரும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பாராட்டுக்கள். இளையோர் திறன்மிகு ஆக்கப்படைப்புகளுக்கும்
ஞாயிறு தொடர் ஆக்குதிறன் நிகழ்வுடன்

துலங்கவைக்கும் சேவைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி

Selvi Nithianandan
Selvi Nithianandan
11 days ago

Selvi Nithianandan

கேள்விக் கணைகள் புள்ளிகள் 17.11.2023)
ஜெயா நடேசன் 27
பத்மினி கமலகாந்தன் 37
நகுலவதி தில்லைத்தேவன்22
சிவதர்சினி இராகவன் 05
சிவமணி புவனேஸ்வரன்0 32
வாணி நடாமோகன் 47
சறோஜினி சோதிராஜா 39
நேவிஸ் பிலிப்ஸ் 05
ஜெசி மணிவண்ணன் -27
ராஜினி அல்போன்ஸ்- 31
லோஜினி முகுந்தன் 41
ராதிகா ஜங்கரன்
இரட்னேஸ்வரி மனோகரன்
சாந்தினி துரையரங்கன் 05

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  Selvi Nithianandan
10 days ago

ராஜினி அல்போன்ஸ்- 31-2=29

DAVID
DAVID
11 days ago

David Anthony Says:13:10
17/11/2023,
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-32ம் வாரம், 17/11/2023,
வெள்ளி.
நற்செய்தி வாசகம்:
——————————
“அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. ஆண்டவரே, இது எங்கே நிகழும்? என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும் என்றார்.”
(புனித லூக்கா:17:26,29,37)

சிந்தனைக்கு:
——————————
“தீய செயல்கள்”
——————————
சகோதர,சகோதரிகளே! இந்த உலகத்தில் உயிரைக்காத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள், எப்படியும் வாழலாம் என்று நினைக்கிறார்கள். அதற்காக பல “தீய செயல்”களைச் செய்து, பணத்தை தவறான வழிகளில் சம்பாதித்து, தாங்கள் வாழுகிறவரை செல்வச்செழிப்போடு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்கள் நிச்சயம் தங்களது நிலையான வாழ்வை இழந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
11 days ago

உற்சாக வணக்கம்
எமக்காக மரணித்த அனைத்து போராளிகளின் மாண்பு போற்றும் திங்களின் அர்ப்பண நிகழ்வுகளும் தொடரும் தொகுப்புகளும் இளையோர் ஆக்கங்களும் மாலைத்தென்றல் நிகழ்வுகளும் சிறப்பே வாழ்த்துக்கள் ..

போரின் அனர்த்தம் புதையுண்ட வாழ்வியல் பக்கம்
சுமைகள் பலத்துடன் நாளும் வாழும் உறவுகள் உன்னதம் மறக்கத்தகுமா?
அனுதின வலியும் எழுகையில் இருளும் இடராய்த் தொடர இன்னமும் ஏதிலிகளாய்
வாழ்வோர் நிலைக்கு வலி போக்கி வழிகாட்டல் வரமே. வரம்புயர நீர் உயரும் அறமே!
நன்றி

வாணியின் தொடர்பணிக்கும் வாழ்த்துக்கள் மிக்க நன்றி.

Selvi Nithianandan
Selvi Nithianandan
12 days ago

கேள்வி வாரம் 399
1. புளோரிடா அமெரிக்காவின் எத்தனையாவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது?
2. சவூதி அரேபியாவில் எண்ணெய் எப்போகண்டுபிடிக்கப்பட்டது? (1930-1940)
3. புகழேந்தியை ஆதரித்த மன்னன் யார்?

DAVID
DAVID
12 days ago

David Anthony Says:14:20
16/11/2023,
Thursday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-32ம் வாரம், 16/11/2023,
வியாழன்.
நற்செய்தி வாசகம்
—————————-
“வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார். ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.”என்றார்.
(புனித லூக்கா:17:24,25)

சிந்தனைக்கு:
——————————
“எச்சரிக்கை”
——————————
சகோதர,சகோதரிகளே! இயேசுவின் வருகையை பணத்திற்காக, புகழுக்காக, களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் திரித்துக்கூறிக்கொண்டிருக்கக்கூடிய போதகர்களிடத்தில் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அவர்களிடம் நாம் ஏமாந்து போகாது, விழிப்பாயிருக்க வேண்டும். இரண்டாம் வருகையை பயத்தோடு அணுகாமல், நல்ல வாழ்வு வாழ்ந்துகொண்டு, விழிப்போடு வாழுவோம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
12 days ago

உற்சாக வணக்கம்
எமக்காக மரணித்த அனைத்துப் போராளிகளின் மாண்பு போற்றும் திங்களின் நிகழ்வுகள் சிறப்புடன் தொடர
உறுதியின் தியாகம்
உறைவிட யாகம்
விடியலின் கனவு
வித்திட்ட தாய்நிலம்
வேராகித் தாங்கியோர்
விடுதலை வேட்கை
வீரத்தின் மாண்பு
எழுகையின் முழக்கம்
என்றுமே தணியாத மூச்சு
ஏற்றியே போற்றுவோம்.
நன்றி

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
13 days ago

உற்சாக வணக்கம்
காலை மாலை நிகழ்வுகளுக்குப் பாராட்டுக்கள்

உணர்வோடு ஓன்றி
உயிர்த்தியாகம் அர்ப்பணமாய் மனதோடு என்றும் நிலைபெற்று வாழும் மாவீரர் தியாகமே
மாண்பு நிலை தாங்குவோம்.
நன்றி

DAVID
DAVID
14 days ago

David Anthony Says:13:03
14/11/2023,
Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-32ம் வாரம்,செவ்வாய், 14/11/2023

நற்செய்தி வாசகம்:
——————————
« நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”
என்றார்.
(புனித லூக்கா:17:10

சிந்தனைக்கு:
——————————
“நமது பணி”
——————————
சகோதர,சகோதரிகளே!
நாம் இறைவனின் பணியாட்கள்
என்ற எண்ணம் எமது முன்னிலையில் இருந்தால், குடும்பத்தில் மனைவி மக்களுக்கு அன்புடன்பணிசெய்வதை பெருமையென
கொள்வோம். அலுவலகத்தில் உள்ளோரைச் சகோதர சகோதரியாகக் காண்போம்.அண்டை அயலாரை அன்பர்களாகக்
கருதுவோம். ஆண்டவனும்
பாராட்டுவான். அனைவரும் வாழ்த்துவர். மனதில் மகிழ்ச்சி நிறையும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

நகுலவதி தில்லைத்தேவன்.
நகுலவதி தில்லைத்தேவன்.
14 days ago

காலை வணக்கம்
காலையில் நிகழ்வுகள் கேட்டேன் மிக்க சிறப்பு
நேரில் வர முடியவில்லை

Kandasamy Segar
Kandasamy Segar
14 days ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 

 மன்னிப்புடன் இன்றையதினம்  செவ்வாய் கிழமை வாழ்வின் உண்மை நிகழ்ச்சி சுகயீனம் காரணமாக தவிர்க்கப்படுகின்றது. மீண்டும் அடுத்தவாரம் தொடரும்.

இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
14 days ago

உற்சாக வணக்கம்
எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதத்தின் சிறப்பில் தொடரும் நிகழ்வுகளுக்கு பாராட்டுக்கள்

உயிரின் தியாகம்
உன்னத வீரம்
களத்தின் வலிமை
போராட்டத் துணிவை
தன்னம்பிக்கை தளராது
தாயகமீட்பில் அர்ப்பணித்த
மாவீரர் தியாகம் மகத்துவமே
மண்மீட்பின் தாகம் தனித்துவமே.
மிக்க நன்றி

சிவதர்சனி
சிவதர்சனி
15 days ago

பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 509!

“இது ஒரு குண இயல்பு” ஐந்தெழுத்துச் சொல்?

1.முதல் மூன்று எழுத்துக்களின் இணைவில் ஊர் ஒன்று?
2.ஒன்று மூன்று இணைய உயிரினம் ஒன்றின் செயல்?
3.ஒன்று நான்கு ஐந்து இணைவில் கட்டடத்துக்கு தேவையானது இது?
4.முதல் இரண்டு எழுத்துக்களின் கூட்டு “ஒளி இருந்தால் இதன் செயல் உண்டு?

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  சிவதர்சனி
15 days ago

கண்டிப்பு
கண்டி
கடி
கப்பு
கண்

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
15 days ago

உற்சாக வணக்கம்
எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் பிராணிகள் மாதத்தின் மாண்பு பற்றி மலரும் திங்களின் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாராட்டுக்கள்.
உயிரின் கொடையால்
மகத்துவம் நிறைத்து
மனிதம் வாழ ஈகை நிறைத்தவர்கள்
மாண்பு போற்றுவோம்
இழப்பின் வலியில் இன்றும்
தவிப்பு தற்காப்புக்காக தவிக்கும் நிலைக்கும் தக்கது புரிந்திட சான்றாய் எழுவோம்.
நன்றி

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்

பெரு மன்னிப்புடன்
போராளிகளென பதிவாகும்
தட்டச்சின் தவறாக பதிவு எழுத்து மாற்றலாகி விட்டது. நன்றி

சி இ தீரன்
சி இ தீரன்
15 days ago

என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துவிடுங்கள் மோகனண்ணா..
சி இ தீரன் 😊

Peirisnevis
Peirisnevis
16 days ago

பாமுக உறவுகள் அனைவருக்கும்
இதயம்கனிந்த தீப ஒளி திருநாள்
நல் வாழ்த்துக்கள்

DAVID
DAVID
16 days ago

அன்பு பாமுக உறவுகட்கு!
எனது இதயங்கனிந்த “தீப ஆவழி”
நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!
ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருள் அகன்று ஒளி பிரகாசிக்க இன்றைய நாளில் இறையருள்வேண்டுவோம்.
அன்புடன்,
டேவிட்.
(பிரான்ஸ்சிலிருந்து)

DAVID
DAVID
16 days ago

David Anthony Says:12:20
12/11/2023,
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-32ம் ஞாயிறு, 12/11/2023.

நற்செய்தி வாசகம்:
——————————
« `உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”என்றார்.
(புனித மத்தேயு:25:13)

சிந்தனைக்கு:
——————————
“விழிப்பாயிருத்தல்”
——————————
சகோதர, சகோதரிகட்கு! நம் வாழ்க்கை எப்பொழுதும் குதூகுலமாக, மங்களகரமாக இருக்க வேண்டும். “விழிப்பாக” நாம் இருக்கவேண்டும். எதிரியும் எதிர்ப்பும் குறைத்து மதிப்பிடக்கூடியவை அல்ல. “அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள் என்கின்றார் இயேசு.முன்மதியோடு செயல்பட அறிவு வேண்டும். உலக அறிவு, அதைவிட மேலாக மறை அறிவு வேண்டும். சிறப்பாக, விவிலியத்தை வாசித்து இறை வெளிப்பாட்டை தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் உணரும் அறிவு பெறுவோமாயின், அவ்வீடு திருமண வீடாக மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
16 days ago

உற்சாக வணக்கம்
காலைத்தென்றல் நிகழ்வுகள் இளையோர் செய்திகள் உடனடித் தலைப்புகள் உர்யரும்பு வீச்சும் தொடரும் நிகழ்வுகளுக்கும் பாராட்டுக்கள். , வாழ்த்துக்கள். நன்றி

DAVID
DAVID
16 days ago

David Anthony Says:18:00
11/11/2023,
Saturday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட 
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-31 ம் வாரம், 11/11/2023.
சனிக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
——————————
« நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களைஅறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில்அருவருப்பாகும்.’என்றார்.
(புனித லூக்கா16:15)

சிந்தனைக்கு:
——————————
      “பணி”                        
——————————
சகோதர,சகோதரிகட்கு! பொதுநலப்பணிகளில் நாம் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். அது நமக்கானஆதாயம் அல்ல. அது நமக்கான முழுமையான பணி. அந்த பணியின் மூலமாக, நாம் கடவுளின் முழுமையானஆசீரைப்பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே, 
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

Indra Mahalingam
Indra Mahalingam
17 days ago

புத்தக வெளியீடு சிறப்பாக அமைய இணைநஂத அனைவருக்கும் சிறபஂபான வாழ்த்துக்கள்

சர்வேஸ்வரி.க
சர்வேஸ்வரி.க
17 days ago

அருமையான உணர்வுபூர்வமான கவிதைகளை தன்னார்வ செயலூக்க தன்னார்வ
பெருமையை எல்லோரினது
வியப்பான வாழ்த்துக்களை
சுமந்து நிற்கும் திருவாளர் ஜெயம் தங்கராஜா அவர்களுக்கு எங்கள் மகிழ்வான வாழ்த்துக்கள்.

DAVID
DAVID
18 days ago

David Anthony Says:12:20
10/11/2023,
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட 
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-31 ம் வாரம், 10/11/2023.
வெள்ளிக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: “ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள்தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.”
என்றார்.
(புனித லூக்கா:16:8)

சிந்தனைக்கு:
——————————
      “ செல்வம்”                      
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே! செல்வத்தைப் பயன்படுத்தி நமது வாழ்வை மேம்படுத்தாமல், மற்றவர்களின்வாழ்க்கைத்தரத்தை நாம் உயர்த்த முயற்சி எடுப்போம். செல்வம் என்பது கடவுள் நமக்குத்தரக்கூடியமிகப்பெரிய ஆசீர்வாதம். அதனை நல்ல முறையில் பயன்படுத்த முயற்சி எடுப்போம்.
ஆகவே, 
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
18 days ago

உற்சாக வணக்கம்
நேரடி நிகழ்வுகளும் இளையோர் ஆக்கப்படைப்புகளும் ஆளுமை நிறைக்க தொடரும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பாராட்டுக்கள்.
தொடராகத் தொடரும் கேள்விக்கணை நிகழ்வின் தொடர்ச்சிக்கும் வாழ்த்துக்கள். நன்றி

Selvi Nithianandan
Selvi Nithianandan
18 days ago

கேள்வி வாரம் 398
1. அகத்திணை எவை?
2. ஏறு தழுவுதல் குறித்துக் கூறும் ஒரே சங்க நூல் எது?
3. கிறித்துவர்களின் தேவாரம் எது?

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  Selvi Nithianandan
16 days ago

1.கைக்கிளை
குறிஞ்சித் திணை
பாலைத் திணை
முல்லைத் திணை
மருதத் திணை
நெய்தல் திணை
பெருந்திணை
2.கலித்தொகை
3.இரட்சணியமனோகரம்

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  Selvi Nithianandan
16 days ago

பத்மினி -கமலகாந்தன் 26
சறோஜினி-சோதிராஜா24
ஜெயா-நடேசன்21
பத்மலோஜினி-திரு 15
Geetharani Paramanathan 07
திக்கம் நடா 05
ராஜினி அல்போன்ஸ் 18
லோஜினி – முகுந்தன் 03

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
19 days ago

உற்சாக வணக்கம்
வியாழன் நிகழ்வுகளும்
கவிதைநேர படைப்புகளும்
தொகுப்பாளர்கள் இணைவும், இளையோர் ஆக்கங்களும் தொடராக இணைந்திட வலுக்கொடுக்கும் அனைவருக்கும் மிகுந்த பாராட்டுக்கள். நன்றி

DAVID
DAVID
20 days ago

David Anthony Says:10:51
08/11/2023,
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட 
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “எமக்காக மரணித்த விடுதலை போராளிகளைபோற்றும் மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
பொதுக்காலம்-31 ம் வாரம், 08/11/2023.
புதன்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————
அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்துஅவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள்ஆகியோரையும், ஏன், தம்
 உயிரையுமே என்னை விட 
மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.”என்றார்.
(புனித லூக்கா:14:25,26)

சிந்தனைக்கு:
——————————
      “சீடத்துவம்”            
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே! ”கிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன்” என்று, பவுலடியார் சொல்வார். எனது வாழ்வில் நான் யாருக்கு முதலிடம் கொடுக்கிறேன்? பணத்திற்கா? பாசத்திற்கா? புகழுக்கா? “சீடத்துவத்திற்கா”?கடவுளன்பிற்கா? எனது வாழ்வில் 
நான் எப்போதும் கடவுளன்பை உணர்ந்து, அதற்காக நான் 
எதையும் இழக்கத்தயாராக
வேண்டும். அப்படிப்பட்ட அன்பிற்காகஇறைவனிடம் வேண்டுவோம்.
ஆகவே, 
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

Selvi Nithianandan
Selvi Nithianandan
20 days ago

கேள்விக் கணைகள் புள்ளிகள் (07.11.2023)
ஜெயா நடேசன் 17
பத்மினி கமலகாந்தன் 27
நகுலவதி தில்லைத்தேவன் 17
சிவதர்சினி இராகவன் 05
சிவமணி புவனேஸ்வரன்0 32
வாணி நடாமோகன் 47
சறோஜினி சோதிராஜா 39
நேவிஸ் பிலிப்ஸ் 05
ஜெசி மணிவண்ணன் -22
ராஜினி அல்போன்ஸ்- 22
லோஜினி முகுந்தன் 31
ராதிகா ஜங்கரன்
இரட்னேஸ்வரி மனோகரன்
சாந்தினி துரையரங்கன் 05

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
21 days ago

உற்சாக வணக்கம்
காலை மாலை நிகழ்வுகளும்
நேரடித் தொகுப்புகளும் இளையோர் ஆக்கப்படைப்புகளும்
சிறப்புடன் தொடர என்றும் இணை அறிவிப்பாளர் பணியுடன் இடைவிடாது நிகழ்வுகளை தொகுக்கும் வாணிக்கும் சிறப்பு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
35 வருடகால சரிதத்துடன் சன்றைஸ்
செய்திகளின் தொடர்ச்சி அதிபர் விடாமுயற்சிக்கும், உருவாக்க பயிற்றல் வளத்திற்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நன்றி

செய்தியாளர்கள் சங்கமமாய்.. ஒரு
இணைய சந்திப்பு நிகழ்வும் வாழ்த்தும் .. பிரகாசித்தால் வளமே
நன்றி

Kandasamy Segar
Kandasamy Segar
21 days ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

வாழ்வின் உண்மை 230 வது வாரத்திற்கான தலைப்பு

அநீதி

சமகாலத்தில் அநீதி அதிகரித்து செல்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
உங்கள் அனுபவக் கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன்
அழைக்கின்றேன்.

இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.