சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
அன்னையும் தந்தையும்….
அவனிப் பேரழகை
அவதார வாழ்வழகை
உவகை நிறை உள்ளத்தின் செயலழகை
வாகை நிறை வாஞ்சையுடன்
வரமாகத் தந்தோர்கள்
வரம்பிட்டு வாழ்வறத்தை விதைப்பிட்ட வரமான பெற்றோரே
சான்றோராய் ஆன்றோராய் சாதுரியம் மிக்கோராய்
வென்றுயரும் வேள்விக்கு புடமிட்ட பொன்னாகி எமக்காக வாழ்ந்தவர்கள்
ஏற்றத்தின் ஏணிகளே அன்னையும் தந்தையுமே ஆலயத்தின் பேரொளியீர்
வரமாகப் பெற்ற பேறு வையத்தின் பெருமைப்பேறு!
நன்றி