வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேது?..ரஜனி அன்ரன் (B.A)19.01.2023

அறிவின் தேடலை ஆற்றலின் முனைப்பினை
இயல்பின் உந்தலை ஈகையின் பெருமையை
நம்பிக்கை உணர்வினை நாளைய கனவினை
நமதாக்கிட வலிமையைத் துடுப்பாக்கி
பெருகிடும் ஆண்டினைப் பெருமையாக்கி
மெருகூட்டுவோம் வலிமை கொண்டு !

ஆற்றல் பெருக ஆளுமை மிளிர
போற்றலும் புரிதலும் துணையாகிட
வளம் பெருகிட வல்லமை ஓங்கிட
வலிமையோடு வாழ்வும் நகர்ந்திட
படைப்புக்களும் பல்கிப் பெருகிட
தங்கு தடையின்றிப்
பொங்கிப் பெருகட்டும் வலிமை !

தரணியில் தடம் பதிக்க
தடைகள் என்று இங்கு எதுவுமில்லை
தடையினை உடைத்து முனைப்போடு உயர
நீடு புகழினை நேர்த்தியாக்கிட
வாழ்வினை மெருகிட வளமினை உரமிட
பெருகட்டும் எங்கும் வலிமை !