சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி

பாமுகம்

பாரினில் ஓர் முகம்
பாமுக பந்தலின் நந்தவனம்
நாற்றிசையில் இனையும்
பலர்முகம்

பாலர் முதல் பாட்டி வரை
பங்கேற்கும் வளர்முகம்
திங்கள் முதல் ஞாயிறு வரை
திறமை காட்டும் ஏறுமுகம்.

நிதம் நிதம் புது புது மலர்கள்
மலரும் நந்தவனம்
மழலைகள் புதுமுகம்
கை வண்ணம் தீட்டும்.
அழகு முகம்.

நற்றமிழ் புகுத்திடும்
வளத்திடும் வளர்நிலம்
பூத்துக் குலுங்கும்
வாசமுள்ள வண்ணமுகம்.

ஆண்டுகள் 25 தொடரும்
வெள்ளிமுகம்
வெள்ளிவிழா கண்ட
பாமுகம்

தலைவனும் தலைவியும்
இனனந்தே விதை இட்டு
வளர்த்திடும் விளைநிலம்
செழித்து வளரும் பயிருக்கு
உரமாய் ஈரமாய் கனிவாய்
உரைத்திடும் பாமுகமே
பல்லாண்டு பல்லாண்டு
பாரினில் தொடர வாழ
வாழ்த்துக்கள்
கோடி

அதிபர் ருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்
நன்றி.