26-04-2022
இனிவரும் நாளெல்லாம் உன் நாளே
முடியவில்லை உன்னாலென வருந்தலாமோ இனியும்
விடியும் ஒருநாள் கனியாததெல்லாம் கனியும்
பிடித்திருந்து ஆட்டிவைத்த ஏழரைச் சனியும்
முடித்து வீடுமாற அகன்றுவிடும் பிணியும்
கெட்டகாலமும் மெல்ல முடிவைத் தழுவிவிடும்
பட்ட துயரங்கள் மொத்தமாகவே விலகிவிடும்
கிட்டவாவென ஒட்ட வாழ்க்கையும் அழைத்துவிடும்
தொட்ட இடமெலாம் பொன்னாக விளைந்துவிடும்
அலக்கழித்த காலமெலாம் அகன்றுவிடும் வேளை
குலைகுலையாய் மகிழ்ச்சியதும் நிறைத்துவிடும் நாளை
முளைத்துவிடும் பூக்களாலே வாசம்பெறும் சோலை
விளைந்துவிடும் புன்னகையால் விடிந்துவிடும் காலை
ஜெயம்
20-04-2022