🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-12
17-08-2023
கனவு மெய்ப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கண்மூடித் தூங்கிட வேண்டும்
காதல் கொண்ட உறவுகள் வேண்டும்
பதறித் துடிக்கும் இதயங்கள் வேண்டும்
கோட்டுப் போட்ட விவசாயியும்
தந்தை கனவறிந்த நற்சேயும்.
பெற்றோர் மொழி கற்ற பிள்ளையும்.
பெரிய திலகமிட்ட பாட்டிகளும்,
தற்கொலை தகர்த்து
மன அழுத்தம் அற்று
பெண்ணடிமை தகர்த்து
பிறப்பில் பேதம் நீக்கி
மரங்களை நாட்டி
சுற்றாடல் பேணி
சுத்தமான சுகமான
ஒக்சிசனை சுவாசித்து,
கருகிப்போன ஈழத்தை
களனிவயல் ஆக்கி
அச்சத்தை அகற்றி
அடிமைத்தனத்தை விலக்கி
பிச்சையற்றோர் நாடாய்.
என் பிரதேசம் பிளவின்றி,
வாழும் தேசமாய்
எம் தேசம் வேண்டும்..
எம் கனவு தேசம் நனவாக
விலை என்ன வேண்டும்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.