சந்தம் சிந்தும் கவிதை

சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்
சுவிசில் இருந்து.

*குழலோசை*

கானகத்தின் மரத்தடியே கண்ணனவன் அமர்ந்திருந்து
கால்களை மாற்றிவைத்து களிப்பாகி குழலெடுப்பான்
தேனமுத இசையாலே தேசமெங்கும் மயக்கிடுவான்
தேவருலகும் எட்டிடவே தேன் மாரி பொழிந்திடுவான்
மானதுவும் மருண்டாங்கே மகிழ்வாகி மயங்கிவர
மயிலாங்கே மழைமுகிலான்
வண்ணத்தில் திளைத்தாட
ஆநிரையும் அணைந்துவந்தே அருளூற்றில் மடிசுரக்க
வானணையும் அரம்பையரும் வயமாகி
வரம்தேட
தேனேந்தும் பூமலரும் திருவனத்தே மணம்பரப்ப
தேவியராம் கோதையரும் திருவடியை நாடிவர
வேணுகோபன் விரலாடும் வேய்ங்குழலின் இசைநாதம்
விரைவியதே மதுராவில்…