இனிய இரவு வணக்கம்
திரு நடா மோகன் அவர்களே
திரு ப.வை.ஜெயபாலன் அவர்களே
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பழமை!
அறிவியலும் அனுபவமும் அடங்கியதே பழமை
சிறியவனே சிறியவளே சிந்தையிலே இருத்து
பொறுமையுடன் கேட்டிடுவாய் போதகமும் வாயில்
புறுபுறுக்கும் பாட்டனும் பாட்டியும் பாக்கை
உரலில் இடிக்கும் ஓசையும்தான் இசையே
உரமாய்த்தான் வாழ்ந்தாரே உழுதுண்டு மகிழ்ந்தாரே
வரமாய்த்தான் நாம்பெற்றோம்
வாழ்வியலின் வனப்புகள்
தரம்குறைவு என்றெனவே தள்ளிவிட
வேண்டாம்
பழங்கதைகள் சொல்லும் பக்குவமும் கண்டாயோ
வளமான வாழ்வுக்காய் வாழ்ந்துதான்
காட்டினாரே
படிப்பறிவு இல்லை பல்கலைகள் வித்தை
நடிப்பனிலே நவரசமும் நல்கும் அந்த வாழ்க்கை
பழஞ்சோறும் கஞ்சியும் பால்சோறும் உண்டு
அழகான இல்லறமும் அமைந்ததுதான் பழமை
பழமையிலே நுண்ணறிவும் பறைசாற்றும் வல்லமையும்
தலங்களிலே எத்தனை தரமுயர்ந்த சிற்பமும்தான்
பழங்காலக் கட்டிடமும் பைந்தமிழ் வரலாறும்
இலக்கியமும் கூறிடுதே இன்பமும்தான் பழமையே
ப.வை.அண்ணா உங்கள் பாரியபணி
போற்றுதற்குரியது. மிக்க நன்றி!
திரு.நடா மோகன் அவர்களே உங்களுக்கும் மிகுந்தநன்றி!!
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.