சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 14.3.23

சந்தம் சிந்தும்
வாரம் 214

தீ

அனல் வளர்த்து
பூவை பாதம்
பதித்து
தொழும் தேவி
மனம் குளிர
வேண்டும் வரம்
கேட்டாள் !

காது அணி
எறிந்து
காணும் அம்புலி
காட்டியவளுக்கு

சீதை அக்கினி
பிரவேசமும்
பாண்டி நாட்டை
எரித்ததுவும்

பார் கண்ட
பின்னே..
கோதை வேண்டுதலுக்கு
பரிவாவள்
திரிபுர தேவி

க.குமரன்
யேர்மனி